Monday, December 5, 2011

சென்னை நகரமும் சில மனிதர்களும்

முன்னறிவிப்பு : இது எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் பதிவல்ல காலங்காலமாக இருக்கும் பொதுபுத்தி பற்றியது மட்டுமே.



இந்த காணொளியை முகநூளில் காண நேர்ந்தது அதில் நண்பரொருவர் இட்ட மறுமொழி இந்த கானொளியில் இருப்பது போலா சென்னை இருக்கிறது சாலைகள் குண்டும் குழியுமாகவும் ஆட்டோ ஓட்டுனர்கள் ரௌடிகளாகவும் குண்டர்களும் பிடியில் மொத்த நகருமும் உள்ளதெனவும் மற்ற நகரங்களில் இவையாவும் உள்ளதென்றாலும் சென்னை முன்னேற விரும்புவதாகவும் அதனால் முதலில் சென்னையை சிங்காரமாக மாற்றிவிட்டு பிறகு இப்படி சலனப்படங்களை எடுக்கலாம் .

என்னோட கேள்வி நீங்கள் முன்வைக்கும் இந்த தகுதியெல்லாம் இருந்தால் தான் ஒருவர் சென்னையை பற்றி சலன படம் எடுக்க வேண்டுமா ? நீங்க சொல்லும் இந்த எல்லா தகுதிகளும் எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் இருக்காது ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குறை இருக்கும் (உ.த) நியூ யார்க் வாசிகளை கேட்டால் பனி நிரம்பிய சாலை ,ஜன நெருக்கடி ,வாகன நிறுத்துமிடம் இல்லை வழிப்பறி போக்குவரத்து போன்றவற்றை கூறுவர் ஆனால் அவர்கள் யாரும் தம் தாய் மொழியையோ தாய் நாட்டையோ தான் வசிக்கும் நகரத்தையோ அடுத்தவரிடம் மட்டமாக சொல்வதில்லை .இந்த தமிழன் மட்டும் ஏன் தான் தமது மாநிலத்தை பற்றி மொழியை பற்றி பிறரிடம் குறைத்தே சொல்கிறானோ தெரியவில்லை ,அயல் மாநிலத்தவர் யாரும் இப்படி குறை கூறி நான் பார்த்ததில்லை ஆனால் ஒவ்வொரு தமிழனும் அடுத்த மாநிலத்தவரிடம் சென்னையை தமிழை விடாமல் குறை கூறுகின்றனர் .ஒரு சமயம் சென்னை பற்றி கூறுங்களேன் என்று ஆந்திர நண்பர் என்னை வினவினார் நானும் ஒவ்வொரு இடமாக சொல்லிக்கொண்டே வர என்னருகில் இருந்த சென்னையிலே பிறந்து வளர்ந்த அந்த நபர் மெரினா பீச் அது ஒரு குப்பை பீச்,மகாபலிபுரமா அது கள்ள காதல் ஜோடி போற எடம் மேற்கொண்டு chennai no good food ,bad road,full rush total waste என்று விளக்குகினார் .இது போன்று பல அனுபவங்கள் எனக்கு உண்டு.

மும்பை,கொச்சி,கொல்கத்தா போன்ற நகரங்களை ஒப்பிட்டு நிறை குறைகளை அடுக்கி கொண்டே போக இயலும் ஆனால் அது தேவையற்றது ஒவ்வொரு நகரமும் தனித்துவமிக்கது .நான் இங்கே கூறவிரும்புவது ஒன்று தான் முகநூல்,ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் இந்த மாதிரி எழுதுவதுற்கு முன்னாள் நம் நண்பர்கள் வட்டத்தில் பிற மாநிலத்தவர்/நாட்டவர் இருக்கிறார்கள் அவர்கள் நம் மாநகரை/மாநிலத்தை/மொழியை பற்றி என்னை நினைப்பர் சிறிதேனும் அவர்கள் மனதில் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துவிடாதா என்று யோசியுங்கள் ,நம்மால் புகழ தான் முடியவில்லை சற்று தூற்றாமலாவது இருக்கலாமே .ஐ பி எல் கிரிக்கெட் போட்டியின்போது மட்டும் வரும் உணர்வெழுச்சி மத்த நேரங்களில் காணாமற் போவது ஏன் ? .

No comments: