Thursday, December 1, 2011

முல்லை பெரியார் நடப்பது என்ன

முல்லை பெரியார் பற்றி சமீப காலமாக செய்தி அடிபடுகிறது தொலைகாட்சியில் ,இணையத்தில் ,பாராளுமன்றத்தில் என்னை தான் நடக்கிறது என்று சற்று பார்ப்போம் .


முல்லை பெரியார் அணை
முல்லை ஆறும் பெரியாரும் கலந்து ஓடும் தேக்கடியில் உள்ளது . 1895ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியில் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக அரபி கடலில் வீணாக கலக்கும் பெரியாறு தண்ணீரை திசை திருப்பி தமிழகத்திற்கு கொண்டுவருவதற்காக செயல் படுத்தப்பட்ட திட்டம் . இதன் மூலம் தென் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் குடிநீர்க்காகவும் விவசாயத்திற்கும் இந்த நீர் பயன்படுகின்றது .இந்த அணை முற்றிலும் தமிழகத்திற்காக மட்டுமே கட்ட பட்ட அணை என்பது தான் வரலாறு அதனால் தான் ஆங்கிலேயர்கள் திருவிதாங்கூர் மன்னரிடம் 999 வருட குத்தகை போட்டுள்ளனர் .

அணை கட்டி நூறு வருடங்கள் ஆகிவிட்டது
முல்லை பெரியார் அணை 115 ஆண்டு தான் ஆகிறது அனால் நம் கண்ணெதிரிலேயே கல்லணை 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கிறது .100 ஆண்டுகளை கடந்த அணைகள் உலகம் முழுவதிலும் ஏராளம் உள்ளன கூகுளிட்டு தெரிந்துகொள்ளவும் .

அணை பலவீனமடைந்துவிட்டது
முல்லை பெரியார் அணை (gravity) புவியிர்ப்பு வகை சார்ந்தது அதாவது தன்னுடைய பலத்தால் (mass) தண்ணீரின் அழுத்தத்தை தாங்கும் அணை.1970 ற்கு பிறகு பல கட்டமாக அணை தமிழக அரசால் பலபடுத்தபட்டுள்ளது .கேரளா அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் இது .நிலா நடுக்கம் அதிக அளவில் வந்தாலும் தாங்கும் அளவிருக்கு அணை வலுவூட்டபட்டுள்ளது .வேறெங்கும் பதிவாகத நில நடுக்கம் கேரளா அரசிற்கு மட்டும் கிடைப்பது ஆச்சர்யம் தான் . இந்த கானொளியில் video அணை எப்படி பலப்டுத்தபட்டதென்று விளக்கமாக உள்ளது .

புதிய ஆணை கட்ட கேரளா அரசு தீவிரமாக முயல்வது எதற்கு ?
இடுக்கி ஆணை மூலம் போதுமான அளவு மின்சாரம் தயாரிக்க முடியவில்லை அதனால் அந்த அணைக்கு வரும் தண்ணீர் அளவை அதிகரிக்க வேண்டும் அதற்கு முல்லை அணையை இடிக்க வேண்டும் .முல்லை பெரியார் ஆணை உடைந்தாலும் அவர்கள் போலி வீடியோவில் காட்டுவதுபோல ஒன்றும் நடக்காது இடுக்கி அன்னை முல்லை அணையை விட பெரியது முல்லை அணையிலிருந்து வடியும் தண்ணீரை அது தாங்கிக்கொள்ளும் .அவர்கள் பரப்புவது போல் உயிரிழப்போ கேரளாவே தண்ணீரில் மூல்குவதோ நடக்காது அவை முற்றிலும் கற்பனையே ,ஏற்கனவே கேரளா தொழில்துறை பெரிதாக ஒன்றும் இல்லை ,இதில் தற்போது இருக்கும் மின்சார தட்டுபாடால் இருக்கும் நிறுவனங்களும் போய்விடும் என்பது தான் அவர்களின் முழுமுதல் நோக்கம் .மேலும் தமிழகத்தை கட்டுப்பாடில் வைக்க ஒரு கருவி வேண்டும். மின்சாரம் தான் தேவை என்றல் அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க கேரள அரசு முயல வேண்டும்தவிர இருக்கும் அணையை இடிக்க நினைப்பது எந்த வகையில் ஞாயம் என்று தெரியவில்லை .



தற்போதய அணை இடிக்கப்பட்டு புதிய அணை கட்டினால் என்ன ?
புதிய அணை கட்டினால் நமக்குள்ள உரிமை முழுவதும் பறிபோய்விடும் இப்போதிருக்கும் மின்சாரம் எடுக்கும் உரிமை மற்றும் புதிய அணை தாழ்வு பகுதியில் இருப்பதால் 150 அடிக்குமேல் தண்ணீர் சேகரிக்க முடியாது 148 அடிக்கு மேல் இருக்கும் தண்ணீரைத்தான் தமிழகம் எடுக்க முடியும் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும் .

காண்க















நாம் செய்யவேண்டியது என்ன
கேரள அரசும் ,கேரளா மக்களும் கூறும் பொய்களையும் ,மக்களிடம் ஏற்படுத்தும் பயத்தையும் போக்க வேண்டும் நம்மால் சாலையில் இறங்கி தான் போராட முடியாது ,twitter,Facebook,Blog போன்றவற்றில் அவர்கள் செய்யும் பொய் ப்ரசாரத்தயாவது முறியடிக்கலாம் அல்லவா . கீழ்காணும் facebook page,youtube video,twitter hashtag போன்றவற்றை பிரபலபடுத்துங்கள் .why this kolaveri போன்ற புரட்சிகர பாடல்களை எல்லாம் ஹிட்டடிக்க வைக்கும் நாம் ,நமது மாநிலத்தின் உரிமைக்காகவும் 30 லட்சம் மக்களின் நலனிற்கும் ஒரு 5 நிமிடம் செலவு செய்வது தவறில்லை .

அவசியம் காண்க :
Facebook page
Youtube video 1
youtube video 2
Article in English

p.s : சென்னையில் வாழ்ந்ததால் மலையாளிகள் நிறைய பேர் எனக்கு நண்பர்களாக உள்ளனர் அவர்கள் யாரும் இந்த புரளியை பரப்பவில்லை இது முற்றிலும் கேரள அரசின் வேலையே தவிர கேரளமக்களின் நோக்கம் அல்ல .

No comments: